இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃபை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியினரும், மதகுரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹிரீக் கட்சியினரும் கடந்த 13 நாள்களாக அரசுக்கு எதிரான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய சூழல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமரும், ராணுவ தலைமைத் தளபதியும் ஆலோசனை நடத்தினர்.