1986ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதியளித்த ஜோசப் கிளெமன்ட், அதற்கு பிறகு ஒருபோதும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவரை கண்டுபிடிப்போருக்கு 5,000 டாலர் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த இந்த முதியவர் விமான நிலையத்தின் பாதுகாப்புக் கருவி சார்ந்த சோதனைகளுக்கு உடன்பட மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜோசப்பை தனியே விசாரித்தபோது அவர் 30 வருடங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நபர் என்பது தெரியவந்தது.