சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு 90 வயது தாத்தாவிற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கு அவரின் குடும்ப உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க, அவருக்காக ஒரு 50 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தாத்தா தன்னுடைய சந்தோஷத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்றும், இந்த திருமணத்தை எதிர்த்தவர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டதாக தாத்தாவின் பேரன் கருத்து தெரிவித்துள்ளார்.