நேபாள முன்னாள் அரசன், அரசிக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:08 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேபாள அரச பரம்பரையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய நேபாள முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது மகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்