பாகுபலி ரம்யா கிருஷ்ணன் போல் குழந்தையை காப்பாற்றி உயிரை விட்ட தாய்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (14:00 IST)
அமெரிக்காவில் பாகுபலியில் வரும் முதற் காட்சி போல குழந்தையை தலைக்கு மேலே கையில் தூக்கி பிடித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
அமெரிக்காவின் செல்சி ருஸ்ஸல் (32) தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். உத்தாவில், போவல் பகுதியில் உள்ள ஏரியில் தனது 2 வயது மகனுடன் சவாரி செய்துள்ளார். 
 
அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது இரண்டு வயது மகன் ஏரியில் விழுந்து விட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்சி எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் நீரில் குதித்து மகனை காப்பாற்ற முயன்றார்.
 
மகனை காப்பாற்ற முடியாமல் தினறிய செல்சி இறுதியில் வேறு வழியில்லாமல் தனது மகனை ஒரு கையால் நீருக்கு மேலே தூக்கி பிடித்தபடி நீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து பக்கத்து படகில் இருந்த உறவினர்கள் குழந்தையை உயிருடன் மீட்டனர்.
 
ஆனால் செல்சியை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் ஆங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்