தாயின் பிணத்தைத் தோண்டி எடுத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மயானக் காவலாளி

திங்கள், 24 நவம்பர் 2014 (16:15 IST)
லெபனான் நாட்டில் டெப் சாய்ஃலி என்பவர் தனது தாயின் பிணத்தை தோண்டி எடுத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உலகெங்கும் செல்ஃபி மோகம் அதி வேகமாகப் பரவிவருகிறது, இது சில நேரங்களில் வீபரித செயல்களுக்கும் இட்டுச் செல்கிறது.
 
இந்நிலையில் லெபனானில் உள்ள இடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வரும் டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்பவர் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
அவரது தாயார் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துள்ளார். இந்நிலையில் தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.
 
அவர், இதுவரை ஏராளமான சடலங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்