சிறுமியின் கண் இமையில் பேன் கூடு: அதிர்ச்சி வீடியோ

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (10:08 IST)
சீனாவில் 5 வயது சிறுமி ஒருவரின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டியிருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 

 
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கண் அரிப்பாலும் கண் எரிச்சலாலும் அவதி பட்டு வந்து உள்ளார். அவரது தயார் பலமுறை நீரில் கண்களை கழுவியும் அந்த எரிச்சல் மற்றும் அரிப்பு போகவில்லை.
 
இதனால் தாயார் சிறுமியை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கண்ணை மருத்துவர்கள் மைக்ரோஸ்கோபி கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டி இருந்தது தெரியவந்தது. 
 
உடனடியாக அதை மருத்துவர்கள் அகற்றினர். அதில் 9 பேன்களும் 20 முட்டைகளும் இருந்து உள்ளது. சுகாதாரமாக இல்லாததால் இது ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் கண் பார்வை இழக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 

நன்றி: pkzlq

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்