‘ஈகோ துபாய் ஒன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் மொத்த எடை வெறும் 25 கிலோ மட்டும்தான். இரண்டு மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் இந்த நவீன காரை வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த திட்டத்தின் தலைமை மாணவர் அஹ்மத் கமிஸ் அல் சுவைதி, ”பெட்ரோல் நீண்ட நாட்களுக்கு நிலைத்து கிடைக்கப் போவதில்லை. எனவே சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத நவீன போக்குவரத்துக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியமானது” என்றார்.