இந்நிலையில் இந்த நிலா பச்சை, பிங் போன்ற நிறங்களில் தெரியும் என இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து கருத்து கூறிய கொல்கத்தா எம்.பி. பிர்லா பிளேனட்டோரியத்தின் இயக்குநர் தேவிபிரசாத் துவாரி வழக்கமான நிறத்திலேயே நில தெரியும் எனவும், வழக்கமான அளவை விட 14 சதவீதம் சிறிய அளவில் அது தெரியும் என கூறியுள்ளார்.
நாளைய நிகழ்வுக்கு பின்னர் இந்த அபூர்வ நிகழ்வு 2030-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நடக்கும் என அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாளை காலை 10.55 மணிக்கே இந்த நிலா சிறிய அளவில் இருக்கும், பகலில் இது தெரியாது. ஆனால் இரவில் நிழல் போன்று இந்த மினி மூன் தெரியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.