இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஊரடங்கு: பெரும் பதட்டம்!

திங்கள், 9 மே 2022 (14:45 IST)
இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்
 
இலங்கை பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவுக்கு இந்த இருவர்தான் காரணம் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென இலங்கை அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடந்த போது நடந்த மோதலால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கொழும்பு இலங்கை காவல்துறை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை தாக்க முயன்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு அமல் கட்டப்பட்டதால் அந்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்