உலகம் முழுவதும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனை தடுக்க ஜப்பான் நாட்டில் புதிய யுக்தி கையாளப்படவுள்ளது. ஆம் இதில் புதுமையான விஷயம் என்னவென்றால் ஜப்பான் நாட்டில் குறிப்பாக, பெண்களுக்கு ஸ்பெஷலாக வாய் விட்டு அழுவதற்காக ஓட்டல் அறைகளை வாடகைக்கு விடுகின்றனர்.
இந்த புதுமையான வசதியை அனுபவிக்க ஓட்டல் அறையை முன்பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை அழுவதற்கு கண்ணீர் பொங்கி வரவில்லை என்றால், கண்ணீர் சுரக்கும் இயந்திரங்களும் அங்கே இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அழுது முடித்தவுடன் பெண்கள் மேக்கப் செய்து கொள்ள அழகு சாதனபொருட்களும் வழங்கப்படுகிறதாம்.............