சிங்கப்பூரில் இந்திய என்ஜினீயருக்கு சிறை

வெள்ளி, 15 டிசம்பர் 2017 (14:12 IST)
இந்திய என்ஜினீயர் ஒருவர் சிங்கப்பூரில்  பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால், அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவை சேர்ந்தவர் பிரபு நடராஜன். இவர் சிங்கப்பூரில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் பஸ்ஸில் பயணம் செய்த போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை 
கொடுத்துள்ளார் இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகிய நிலையில், வழக்கை விசாரித்த  சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்