காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

புதன், 16 ஜூன் 2021 (10:15 IST)
பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. 

 
புதன்கிழமை அதிகாலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிந்தது. செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதில் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை கூறுகிறது.
 
கடந்த மே 21-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் பெரிய மோதலாகும் இது. காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் உருவாகியிருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்