ஐ.எஸ். அமைப்பினரைத் திருமணம் செய்துகொள்ள போட்டி போடும் பெண்கள்

புதன், 25 பிப்ரவரி 2015 (15:10 IST)
ஐ.எஸ். அமைப்பினரைத் திருமணம் செய்துகொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 


இங்கிலாந்தை சேர்ந்த 8 மாணவிகள் ஐ.எஸ். அமைப்பினரைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சிரியாவுக்கு சென்றுள்ளதாக அதிர்சசுயூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஷமிமா பேகம், கதிஜா சுல்தானா, அமிரா அபாஸி ஆகிய மூன்று பெண்கள் சிரியாவுக்கு சென்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், மேலும் ஐ.எஸ். அமைப்பினர்களுக்காக மணமகள் தேடும் ஆன்லைன் வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து பெண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இதில், குறிப்பிட்ட ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்ள மட்டும் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்