இதனையடுத்து, செல்வராஜ் லக்ஷ்மணனுக்கு 30 மாதங்கள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நடுவர் ஷோரி நோர் மற்றும் தனசேகர் சின்னையா ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறியுள்ள துணை அரசு வழக்கறிஞர், “இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சிங்கப்பூர் அரசு கொஞ்சம் கூட சகிப்புத் தன்மையை காட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.