போர் விமானங்களை இந்தியாவுக்கு பரிசாக வழங்கும் இஸ்ரேல்

வெள்ளி, 7 ஜூலை 2017 (18:34 IST)
இந்திய பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்திற்கு இஸ்ரேல் ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவுக்கு பரிசாக அளிக்க உள்ளது.


 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாட்டு தலைவர்களின் நட்புறவு உலக நாடுகளை வியக்க செய்துள்ளது.
 
இந்தியா பல காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து ராணுவத்திற்கு தேவையாக ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் புதிய ஹெரான் டிபி ஆளில்லா போர் விமானங்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையைழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு இஸ்ரேல் கொடுத்த பரிசாக கருதப்படுகிறது. இதன்மூலம் இந்திய ராணுவத்தின் பலம் கூடும். போரின்போது உயிரிழப்பும் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்