டோங்கோ தீவுக்கு 2 லட்சம் டாலர் நிவாரண உதவி: இந்தியா அறிவிப்பு!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:43 IST)
சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிவாரண உதவி செய்யப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் தோன்றிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் டோங்கோ என்ற தீவு சிதிலமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டோங்கோ தீவின் மீட்பு பணிக்காக உலகின் பல்வேறு நாடுகள் நிவாரண நிதி அளித்து வருகின்றன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோதீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது மேலும் மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு உதவிகளும் வழங்குவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்