இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்படுவதாகவும், தனது சகோதரர் நியாயமான விசாரணை அல்லது நிவாரணம் இல்லாமல், காலவரையின்றி சிறையில் வைக்கப்படுவதற்காக சட்ட செயல்முறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
ராணுவ தளபதி முனீர் பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியை நடத்தி வருவதாகவும், இம்ரான் கானை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக தனிமைப்படுத்தப்படுவதாகவும், சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும்ன் எந்த நேரத்திலும் சிறையிலிருந்து "கெட்ட செய்தி" வரலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.