பாகிஸ்தானில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அந்த நடன நிகழ்ச்சி, மதத்தை அவமதித்து செய்வது போன்று இருந்ததாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில், நடிகை வீணாமாலிக், அவருடைய கணவர் ஆசாத் பஷீர், தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மத அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடிகை வீணா மாலிக், அவரது கணவர் ஆசாத் பஷீர் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 26 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா 13 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.