இதனால் கோபத்தில் இருக்கும் ஸ்டீபன், தன்னுடைய மனைவியை அடிக்கடி கொடுமைபடுத்தி வந்துள்ளார். ஜாக்குலினுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை உள்ளதால், மருத்துவமனைக்கு சென்று ஒரு வருடம் சிகிச்சையும் பெற்றுள்ளார். ஆனால், ஸ்டீபன் சிகிச்சை எடுக்க மருத்துவிட்டார்.
மேலும், ஜாக்குலினுக்குதான் உடலில் பிரச்சனை என்று கூறி வந்துள்ளார். அடிக்கடி சண்டை வருவதால், கணவனுடன் கோபித்துவிட்டு தன்னுடைய தாய் விட்டுக்கு சென்ற ஜாக்குலின், 3 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் சண்டை போட்ட ஸ்டீபன், இதுதான் உன்னுடைய கடைசி நாள் என்று கூறி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஜாக்குலினின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.