சீனாவில் கடும் பனிமூட்டம் : சாலை விபத்தில் 17 பேர் பலி

ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:01 IST)
சீனாவில் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று காலையில்  கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த 56 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியகிறது. மேலும், 22 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றூ வருகின்றனர்.

இந்த நிலையில் பனிமூட்டம் நிலவுவதால், வாகனத்தில் வேகத்தைக் குறைத்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்