பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கு 260 பேர் பலி

செவ்வாய், 23 ஜூன் 2015 (04:20 IST)
பாகிஸ்தானில் கடும் வெயிலுக்கு 260 பேர் பலியானார்கள்.
 
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மேலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகம் அதிமானது. குறையவில்லை. இதனால் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் அவஸ்தைப்பட்டனர். குறிப்பாக நோயாளிகள் கடும் துன்பமடைந்தனர்.
 

 
மேலும், வெயில் சுமார் 45 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையைத் தொட்டதால், வெயிலுக்கு இதுவரை சுமார் 260 பேர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
 
இவ்வாறு, வெயிலுக்குப் பலியானவர்களில் முதியோரும், சாலையோரங்களில் வசிப்பவர்களுமே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்