சமீபத்தில், இவரின் போராட்டத்துக்கு ஆதரவாக பேசிய விபுல்தேசாய் என்ற இளைஞர், இந்தப் போராட்டத்திற்காக தான் உயிர் தியாகம் செய்ய தயார் என்று கூறியிருந்தர். இதனைக் கேள்விப்பட்ட ஹரிதிக் பட்டேல் அவரது வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவரிடம் பேசிவிட்டு இருவரும் வெளியே வந்தபோது விபுல்தேசாய் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
அதில் “ஹர்திக் பட்டேல் என்னிடம், நாம் பட்டேல் சமூகத்தின் மைந்தர்கள். நாம் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. உங்களுக்கு தைரியம் இருந்தால், இரண்டு அல்லது மூன்று போலிசாரைக் கொல்லுங்கள் என்று கூறினார் ”என்று கூறியதாக தெரிகிறது. இது குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.