மாட்டிறைச்சியில் பூங்கொத்து: ப்ரோபோசலில் மயங்கிய பெண்!!

சனி, 2 செப்டம்பர் 2017 (15:13 IST)
சீனாவில், தன் தோழியிடம் வித்தியாசமான முறையில் தனது காதலை சொல்ல மாட்டிறைச்சியை கொண்டு பூங்கொத்தினை வைத்து ப்ரோபஸ் செய்துள்ளார் ஒருவர்.


 
 
சீனாவின் குவாங்ஸொவ் பகுதியில் வசிக்கும் சியாவோ, தன் தோழியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வழக்கமாக மாட்டிறைச்சி உணவகம் ஒன்றில் சந்திக்கும் பழக்கத்தை கொண்டுயுள்ளனர்.
 
இதனால், அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் மாட்டிறைச்சி கொண்டு பூங்கொத்து ஒன்றை தாயாரித்து தருமாறு கேட்டுகொண்டுள்ளார் சியாவோ.
 
உரிமையாளரும் அதே போல், இறைச்சியை மென்மையான பூ இதழ்களாக மாற்றி, ரோஜா பூக்கள் போல் உருவாக்கினர். மேலும், இளம்பச்சை இலைகளை வைத்து அலங்கரித்து பூங்கொத்தினை  கொடுத்துள்ளார்.
 
மாட்டிறைச்சி பூங்கொத்தை எடுத்து சென்று தோழியிடம் ப்ரோபோஸ் செய்து, தற்போது இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்