விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன்: கடவுள் மிரட்டல்

சனி, 29 அக்டோபர் 2016 (11:53 IST)
தகாத வார்த்தைகள் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொள் இல்லை என்றால் விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன் என்று கடவுள் மிரட்டியதாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கூறினார்.


 

 
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ, அமெரிக்க அதிபர் மற்றும் மதத் தலைவர் போப்பை தகாத வார்த்தைகள் கொண்டு விமர்சித்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.
 
தற்போது ஜப்பான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். அப்போது விமானத்தில் பயணிக்கும்போது கடவுள் அவரிடம் பேசியதாக கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
கடவுள் தன்னிடம், தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்; இல்லையென்றால் விமானத்தை கீழே விழ செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறினார்.
 
மேலும் இனி தகாத வார்த்தைகள் பேச மாட்டேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்