போருக்கு ஆயத்தமாக இருங்கள்.... ராணுவத்தினருக்கு சீன அதிபர் அறிவுரை

புதன், 14 அக்டோபர் 2020 (19:49 IST)
இந்திய – சீன எல்லையான லடாக்கில் அவ்வப்போது சீனா ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகார்கள் எல்லைப்பகுதியில் நீடிக்கும் பதற்றத்தைத் தணிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் குவாண்டாங் ராணுவத்தளத்தைப் பார்வையிட்ட ஜினபிங் ராணுவ வீரர்களிடையே பேசிம்போது, போருக்கு ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதாக சீனா பிரபல ஊடகங்கள் மற்றும்  ஆங்கிலத் தொலைக்காட்சி இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்