அப்போது அவர் காரில் சென்றுள்ளார். அங்கே சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர், குடித்துவிட்டு காரை ஓட்டுவதாக சந்தேகத்தன் பேரில் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், வியாசெஸ்லவ் காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில், அவர் காவல் துறையினரை தாக்க முற்பட்டார். இதனையடுத்து, வியாசெஸ்லவ் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்தும், தங்கள் கைத்தடிகள் மூலமும் தாக்கினர். இதில் வியாசெஸ்லவ் முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும், முகத்தில் இருந்து ரத்தம் ஒழுகியது.