வங்கதேச துறைமுகத்தில் தீ விபத்து - 100 பேர் காயம் ! 5பேர் பலி

ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:49 IST)
வங்கதேசத்தின் முக்கிய கடல்துறைமுகமான சிட்டகாங் பகுதியின் வேலியே 40 கிமீ தொலைவில்   உள்ள உள் நாடு சேமிப்புக் கிடங்கில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்  தீயை கட்டுக்கொண்டு வர முயன்றனர்.

அப்போது, வெடிவிபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில்,தீயணைப்பு வீரர்கள் உட்பட  சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இதில், 5 பேர் பலியாகினர், 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு மரருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீபத்து ஏற்பட்டு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்