சப்பாத்தியை வட்டமாக சுடவில்லை என்று, பதிமூன்று வயது சிறுமியை அவளது தந்தையும், சகோதரனும் அடித்துக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானில், அஜீம் பார்க் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அனீகா என்பவள், தன் வீட்டு சமையல் வேலையை செய்து வந்தாள். சம்பவத்தன்று அந்த சிறுமி சப்பாத்தி தயாரித்து, தனது தந்தைக்கும், அண்ணனுக்கும் கொடுத்தாள்.