திடீரென தனது 1 பில்லியன் பங்குகளை விற்ற எலான் மஸ்க்! – காரணம் என்ன?

வியாழன், 11 நவம்பர் 2021 (11:46 IST)
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது 1 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் டாப் 10 நபர்களில் முக்கியமானவராக வளர்ந்துள்ளவர் எலான் மஸ்க். இவருக்கு சொந்தமாக டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆகியவையும் உள்ளன. மேலும் பல நிறுவனங்களையும் நடத்தி வரும் எலான் மஸ்க் குறைந்த காலத்தில் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக அறியப்பட்டவர்.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தன்னுடைய நிறுவன பங்கில் தன்னிடமிருந்ததில் இருந்து 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார். இதனால் எலான் மஸ்க் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதா என்ற விவாதங்கள் எழுந்த நிலையில் கூலாக விளக்கம் சொல்லியுள்ள எலான் மஸ்க், வரி அதிகமாக கட்ட வேண்டியிருப்பதால் பங்குகளை விற்றதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்