உலக நாடுகளை அச்சுறுத்திவரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இந்த உயிர்கொல்லி நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,552 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார மையம் தெரிவிக்கையில், எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை 20,000 பேரை எட்டும் எனவும் மேலும் இந்த நோயை தடுக்க அடுத்த ஆறு மாதங்களில் 490 மில்லியன் டாலர் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளது.