ஐக்கிய அரேபிய நாடுகளில் கடந்த பல மாதங்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அங்கு இயற்கை வளங்களும், நீர் வளம், விளைநிலங்கள் வறண்டு காணப்படுவதால் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையை கட்டுக்குள் கொண்டு வர ஐக்கிய அரேபிய நாடுகள் செயற்கை மலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மலையை உருவாக்கினால் மழை பெய்யும் எனவும், இதன்மூலம் வெப்பத்தின் தக்கத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் கருதப்படுகிறது.