இந்திய அதிகாரிகள் என்னை கடத்த முயன்றனர்: மெகுல் சோக்சி குற்றச்சாட்டு!

வெள்ளி, 16 ஜூலை 2021 (21:19 IST)
இந்திய அதிகாரிகள் என்னை கடத்த முயன்றனர் என்று வியாபாரிகள் சோக்சி குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திடீரென மாயமாகி ஆண்டிகுவா நாட்டில் மெகுல் சோக்சி இருப்பதாக கூறப்பட்டது. அதன்பின் அவர் சட்டவிரோதமான டொமினிக்கா என்ற நாட்டிற்கு சென்ற போது அங்கு கைது செய்யப்பட்டார்
 
பின்னர் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து தற்போது அவர் மீண்டும் ஆண்டிகுவா நாட்டில் உள்ள நிலையில் என்னை இந்திய அதிகாரிகள் கடத்த முயன்ற தாகவும் எனது வியாபாரம் அனைத்தையும் மூடி விட்டதாகவும் என் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
 
இந்த சம்பவத்தால் எனது உடலில் மட்டுமின்றி மனதிலும் நிரந்தர காயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்