நடுவானில் குழந்தை பெற்ற பெண்...

புதன், 24 அக்டோபர் 2018 (20:00 IST)
உலகில் எத்தனைதான் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அவை குறித்த எல்லைகளைத்தண்டியோ அல்லது விநோதமாக நடைபெற்றாலோ அது சரித்திரத்தில் மட்டுமல்ல அன்றாட நிகழ்வுகளில் இடம்பெற்று உலகின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது.
அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜகார்த்தாவை நோக்கி அபுதாபியில் இருந்து சென்ற எத்தியாட் ஏர்வேஸ் விமானம் ஒன்று அரேபியக் கடகுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது இந்தோனேசியா நாட்டுப் பெண் ஒருவருக்கு பிரசவ வலிஏற்பட்டதை ந்தொடர்ந்து அவருக்கு விமானத்திலேயே பெண்குழந்தை பிறந்தது.இதனியடுத்து அவ்விமானம் இன்று மும்பையில் இறக்கப்பட்டு தாயும் சேயும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் சிலமணிநேரம் தமதமாக சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்