மகிழ்ச்சியின் உச்சத்தில் ஓரின சேர்க்கையாளர்கள்!! என்ன நடந்தது தெரியுமா?

புதன், 6 டிசம்பர் 2017 (12:13 IST)
ஆஸ்திரியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது. அதை தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 15 ஐரோப்பிய நாடுகள் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கின.
 
அதை முன்னுதாரணமாக காட்டி 2009-ம் ஆண்டு ஆஸ்திரியாவிலும் இத்தகைய திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சிறிது காலத்திலே அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
வழக்கை விசாரித்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்