ஏமன் நாட்டில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகர் ஒன்றில் திருமண வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 13 பேராவது கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவான பழங்குடியின தலைவர் ஒருவரின் விருந்து வைபவம் ஒன்றை இலக்கு வைத்து, இந்த தாக்குதலை ஏமனிய அதிபர் அபெட்ரப்போ ஹட்டி அவர்களுக்கு ஆதரவான சவுதி தலைமையிலான கூட்டணிப் படை நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.