இவர்களை உள்ளடக்கிய குழு அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ்செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு [Wisconsin Alumni Research Foundation] (WARF) கணிசமான செயல்திறன் கொண்ட அத்வேக நவீன தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி இருந்துள்ளனர். இதற்கான காப்புரிமையையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
அனால், ஆப்பிள் நிறுவனம் இந்த நவீன தொழில்நுட்பத்தை அனுமதி பெறாமல் பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவின் மேடிசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த ஆராய்ச்சி அமைப்புக்கு, ரூ.1,400 கோடி ரூபாயை ஆப்பிள் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.