அந்தமானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:59 IST)
இந்தியாவின் யூனியன் பிரதேச தீவான அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் முதலாவதாக அதி காலையில் போர்ட்ப்ளேயரில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து காலை 9.15 மணி அளவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கும் உருவாகியுள்ளது.

ஆனால் இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. எனினும் திடீர் நிலநடுக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்