இவர் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் சுப்புராஜ் தலையில் பலமாக அடித்தார். அதன் பின்னர் அந்த நபர் தனது கைகளால் சுப்புராஜின் முகம் மற்றும் வாயில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதற்கு பின்னரும் அந்த நபர் சுப்புராஜை கால்களால் உதைத்தார். அந்த நபர் சுப்புராஜை தாக்கும் போது “ஐ.எஸ்., ஐ.எஸ். எங்கள் நாட்டை விட்டு வெளியே போ” என்று உரக்க கத்தியதினார். பிறகு அங்கிருந்து ஓடி விட்டார்.
அமெரிக்க கூட்டமைப்பு, இது மதரீதியான தாக்குதல் என்றும், அவருக்கும் ஐ.எஸ்.அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.