110 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ள இளம்பெண்!

செவ்வாய், 17 மே 2022 (18:56 IST)
இளம்பெண் ஒருவர் 110 லிட்டர் தாய்ப் பாலை விற்பனை செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் அலிஷா என்பவர் தனக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பதாகவும், தன்னுடைய குழந்தைக்கு போக மீதமுள்ள தாய்ப்பால் வீணாக்க விரும்பாத அவர் தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தாய்பால் சுரக்காத பெண்கள் அவரிடம் வந்து தாய்ப்பாலை விலைக்கு பெற்றுச்சென்றனர். அமெரிக்காவில் பிரபல பால் பவுடர் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்படவே அதிக தாய்மார்கள் அலிஷாவிடம் தாய் பாலை வாங்கி செல்கின்றனர். இதுவரை அவர் 118 லிட்டர் தாய்பாலை விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்