அந்தத் தேர்தலில் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அப்துல்லா அப்துல்லா ஏற்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல் இழுபறி நிலை நீடித்தது.
இந்நிலையில் தற்போதைய அதிபர் கர்சாய் முன்னிலையில் அவர்கள் இருவரும் இடையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அஷ்ரப் கனி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா பிரதமராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.