''9000 ரஷ்ய வீரர்கள் பலி''- உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

வியாழன், 3 மார்ச் 2022 (15:35 IST)
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8  வது நாளாகப் போர் நடந்து வருகிறது.

இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இ ந் நிலையில்,   ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர்  உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைனுக்கு நோட்டோர் நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் அணு ஆயுத உதவிகள் செய்து வருவதாக ரஸ்யா நேற்று குற்றம் சாட்டியது.

 இ ந் நிலலையில்,  உக்ரைனில் குவிந்துள்ள ரஷ்ய ராணுவவீரர்களில் இதுவரை சுமார் 9000 பேர் பலியாகியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை ரஷ்யாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கி வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள் மற்றும் 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்தாக தகவல வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்