பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: 50 பேர் படுகாயம்

ஞாயிறு, 5 மார்ச் 2017 (16:10 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு பகுதியில் இன்று காலை 6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. 
 
இந்த நடுக்கத்தால் பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் சேதம் அடைந்தது. இதில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்