சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது 100 நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகை எதுவும் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. 100 நிறுவனங்கள் நடத்திய சோதனையை முயற்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது 200 நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலையை நிரந்தரமாக நடைபெற நடைமுறைப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 200 நிறுவனங்களில் பணிபுரியும் 5000 ஊழியர்கள் இனி திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பணிபுரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் நிறைவுடன் இருப்பார்கள் என்றும் வேலை செய்யும் நான்கு நாட்களிலும் அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.