மலேசியாவில் 45,000 இந்தியர்களுக்கு வேலை

வியாழன், 3 மார்ச் 2011 (19:42 IST)
மலேசியாவின் பல்வேறு தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க சுமார் 45,000 இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். சுப்பிரமணியன், நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் தொழில் செயல்பாட்டை நிறுத்த வேண்டியது வரலாம் என்றும் கூறினார்.

சுமார் 52 துறைகளில் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும்,அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு மேற்கூறிய முடிவு எடுக்கபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்