மலேசியாவில் குருதுவாரா மீது கல்வீசித் தாக்குதல்

புதன், 13 ஜனவரி 2010 (11:54 IST)
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள குருதுவாரா மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருதுவாராவில் நேற்று மாலை பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போது, 6.45 மணியளவில் இளைஞர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குருதுவாராவின் முன்புற கண்ணாடி ஜன்னல் உடைந்ததாகவும் காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

குருதுவாராவுக்கு அருகேயுள்ள தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்தின் மீதும் மர்ம இளைஞர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்