பாதுகாப்பு படையில் 5000 விடுதலைப் புலிகள் - நாமல் ராஜபக்ச
திங்கள், 2 ஜூலை 2012 (13:09 IST)
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட்ட 5000 இளைஞர், யுவதிகள் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் தொழில் நடவடிக்கைகளுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த விடயம் தொடர்பாக நான் பாதுகாப்பு செயலாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி அவர்களின் சேவைகளை பிரதேசத்தின் விவசாய துறையை விருத்தி செய்வதற்காக பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
இதற்காக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 3000 ஏக்கரை பயன்படுத்தி விசேட விவசாய பண்ணைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதோடு அவர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மாதம் 15000 முதல் 20000 ரூபா வரை சம்பளம் வழங்கவும் எதிர்பார்த்துள்ளேன் என்று நாமல் ராஜபக்ச கூறினார்.