பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 14 பேர் காயம்

செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (16:52 IST)
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் காயமடைந்தனர்.

பெஷாவர் அருகே சத்தர் பகுதியில் உள்ள சந்தையில் ரிமோட் கருவி மூலம் அந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பெஷாவர் நகர போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் உள்ள ஒரு கடையின் முன்பாக இருந்த இருக்கைக்கு கீழே அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் கூறினர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்