பலுசிஸ்தான் கலவரங்களில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை: ஹிலாரி
ஞாயிறு, 1 நவம்பர் 2009 (16:52 IST)
பலுசிஸ்தானில் நடக்கும் கலவரங்களை தூண்டுவது இந்தியாவே என பாகிஸ்தான் குற்றம்சாற்றிவரும் நிலையில் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அமெரிக்க அயலுயுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தான் மேற்கொண்ட 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்புகையில் லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹிலாரி, இந்த கருத்தை அப்போது வெளியிட்டார்.