காதலிக்கப் பெண் கிடைக்கவில்லை! பாலுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்!
புதன், 30 அக்டோபர் 2013 (17:44 IST)
சீனாவில் உள்ள ஜியாசிங் என்ற நகரத்தைச் சேர்ந்த யாங் ஹூ (25) என்ற நபர் பல ஆண்டுகள் ஆகியும் தனக்கு பெண் துணை அல்லது காதலி கிடைக்காத விரக்தியில் தன் ஆணுறுப்பை அவரே அறுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE
இதில் வினோதம் என்னவெனில் இந்த பயங்கரத்தை தனக்குச் செய்துகொண்டபிறகு ரத்தம் ஊற்ற ஊற்ற தன் சைக்கிளில் ஆஸ்பத்திருக்கு சென்றார். மேலும்...
அங்கு செல்லும்போது அறுத்த தனது பாலுறுப்பைக் கொண்டு செல்ல மறந்து போனதால் மருத்துவர்களின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் சைக்கிளில் சென்று உறுப்பை எடுத்து கொண்டு வந்தாராம், ஆபரேஷன் வெற்றியா தோல்வியா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.
நகரத்திற்கு வந்து ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதுதான் அவரது லட்சியமக இருந்ததாம்! ஆனால் நாளாக நாளாக ஆண்டுகள் உருண்டோட விரக்தியின் உச்சத்திற்குச் சென்றுள்ளார் அந்த நபர்.
இவர் துணிக்கடையில் கடினமாக உழைப்பவராம். இந்த நிலையில் 27ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய அவர் இனிமேல் 'அது'க்கு என்னதான் பயன்? என்று அறுத்துக் கொண்டாராம். குறைந்தது பெண்களை பற்றி நினைக்காமலாவது இருக்கலாமே என்பதுதான் அவரது வாதம் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.